
உன்னுள் நான் வந்த
பின்பு தான் எனக்கு
வலிகள் கூட சுகமாய்
இருந்தது .....!!!!!
நாள் முழுவதும் உன்
நினைவுடனேயே
வாழ்கிறேன் ....உன்
அருகில் வாழ தான்
வழியில்லை .....!!!!!
துன்பத்தை மட்டுமே
அரவணைத்த என்
மனம் உந்தன் அன்பெனும்
அரவணைப்பை மட்டுமே
விரும்புகிறது
இப்போதெல்லாம் !!!!
நானும் ஒரு தாயின்
வயிற்றில் தான் பிறந்தேன்
ஆனா தாய்மையின் சாயலை
அன்பை உன்னில் மட்டுமே
பார்த்தேன் என் தாயானவனே !!!!!
அன்பால் என்னுள் வந்தாய்
இன்று எந்தன் உயிராகி
விட்டாய் மறந்தும் கூட
உன்னை நான் மறக்கவே
மாட்டேனடா!!!!!!
v.m.j.gowsi
No comments:
Post a Comment