Wednesday, July 6, 2011


ஒவ்வொரு நிஜமான அழுகைக்கு
பின்னும் பொய்யான சிரிப்புண்டு
எந்தன் புன்னகை போலவே v.m.j.gowsi

நீ கனவில் வந்தாய்
உன்னுடைய தீண்டல்களால்
மாறாத பரவசத்தை ஏற்படுத்தி
விட்டாய் நானோ தூக்கம்
தொலைந்த பேதையாய்
v.m.j.gowsi

என் தாயானவனே என்
நினைவோடு நீ இருக்கும்
போது எனக்கென்ன பயம்
தோல்வி கூட சுகமாகும்
v.m.j.gowsi

என் கவிதையில் ஏதோ ஏக்கம்
தெரிகிறதாக சொல்கிறார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
என் தாயானவனே உந்தன்
பாசத்தால் வந்த ஏக்கம் என்று
v.m.j.gowsi
உன் நினைவுகளின் கொஞ்சலில்
உணர்ந்தேன் தாயன்பை .....
v.m.j.gowsi

உன்னை நான் பெண்ணாய்
பிறந்து நேசித்தே பாவமடா
உன் நினைவில் தனிமையில்
வாழ வழி இல்லையே வலிக்குதடா ...
v.m.j.gowsi
உன் நினைவுகள் விழிகளில்
ஈரமாய் இருக்கும் மட்டும்
எந்தன் இரவுகள் விடியாத
இரவுகள் தானடா
v.m.j.gowsi

நிலவையே காதலித்தாய்
உணர்கிறேனடா உன் மீது
கொண்ட காதலை ஆம்
நீயும் என் வாழ்வில் தூரம்
தானே அந்த நிலவு போலவே ...
v.m.j.gows
ஆயிரம் கவிதை எழுதிவிட்டேன்
என் வாழ்க்கை கவி நீயோ என்னுடன்
இல்லை ....
v.m.j.gowsi

கண்களில் காதல் நினைவு
கைகளில் காதலன் கவிதை
தூக்கத்தை எங்கே போய்
தேடுவது சொல் என்னவனே ..
v,m,j,gowsi

நான் எழுதும் வார்த்தைகளின்
வலி யாருக்கும் புரியாது
என் கண்ணீரை தவிர .....
v.m.j.gowsi

என் உணர்வுகளால் என் மனதில்
நடத்தப்படும் நாடகத்தின்
அரங்கேற்றமே எந்தன் கண்ணீர் ..
v.m.j.gowsi

உறங்க போகும் போதுதான்
தெரிந்தது உன் பிரிவு உறக்கத்தை
பிரிக்க வந்தது என்று
v.m.j.gowsi
உயிரின்றி உடல் வாழுமா ?
உன் நினைவின்றி நான் வாழ்வேனா ?
v.m.j.gowsi

உன்னை நேசித்தது பாவமா
நீ என்னில் பாசம் வைத்தது
பாவமா ..இல்லை என்னை
காணாமலே நீ போனது
நம் காதல் சாபமா ...
v.m.j.gowsi

கனவில் ஆவது உன்னை
அணைத்து விட துடிக்கிறேன்
படுக்கை அறை வந்ததும்
தூக்கத்தை தேடியே இரவு
முடிகிறது காதல் செய்த
பாவத்திற்கு கண்ணீர் மட்டுமே
பரிசாய் ...........
v.m.j.gowsi

மரணத்தின் இறுதி நொடி துடிப்பு
சுகமானதாய் இருக்கும் என்று
உணர்கிறேன் உன்னாலே வந்த
எந்தன் உணர்வுகளின் துடிப்பால் ...
v.m.j.gowsi

நான் அனுபவிக்கும் வலிகள்
உன்னால் என்னுள் செத்துப்போன
உணர்வுகள் அனைத்தும்
கானல்நீராகி போன நம் காதலை
பருக துடிக்குதடா ......
v.m.j.gowsi

நான் வாழ்வது வேறோர் வாழ்வை
இருந்தாலும் நான் மரிப்பது
என்னவனே உன் நினைவோடுதானடா
v.m.j.gowsi

படைத்தவனுக்கு கருணை
இல்லை பேதை இவள் காதல்
மேல் ...கண்ணீர் உள்ளவரை
வாழ்க்கை கண்ணீர் தீர்ந்த
பின்பு மரண படுக்கை ...
v.m.j.gowsi

வலிகளை சுமந்து வாழ்வதை
விட மரணத்தை தழுவி
வாழலாம் என்று எண்ணினேன்
நீயோ சத்தியத்தை வாங்கி
வாழ வைத்து விட்டாய்
மரண வலியை விட நீ
அதிக வலியை தந்து
விட்டாயே!!!
v.m.j.gowsi

கடவுள் எனக்கு உயிர் வாழும்
வரத்தை கொடுக்க வில்லை
உன் நினைவில் வாழும்
வரத்தை கொடுத்து விட்டான்
இப்போது இறைவனை
வேண்டுகிறேன் உன்னோடு வாழும்
வரம் வேண்டும் ஏதோ
ஓர் ஜென்மத்தில் ........
v.m.j.gowsi

Tuesday, July 5, 2011


கண் தெரியாதவன் பாதை காட்டிய
கதையாய் என் வாழ்க்கை ....
காதலை காட்டியவன் வழி மாறி
சென்றதால் ...v.m.j.gowsi

கற்பனையில் உன்னோடு என் ஆயுளானவனே!!!

கழுத்தில் நீ இட்ட தாலியுடன்
உன்னை சேர்ந்த சந்தோஷத்தில்
கண்கள் உனக்காக ஆனந்த கண்ணீர்
வடிக்கும் நீயோ ஆறுதல் சொல்பவனாய்
இனி உன் கண்ணில் நான் கண்ணீரை
பார்க்ககூடாது என்கிறாய் தலை
அசைத்தவளாய் உன் தோள் சாய்கிறேன் ......

ஆனந்தமாய் ஆரம்பிக்கும் நம்
வாழ்க்கைக்கு அத்திவாரமாய்
நம் முதல் நாள் இரவு உன் மடியில்
இல்லை என் தாயானவன் மடியில்
இனிதே ஆரம்பிக்கிறது நம் காதல்
சாம்ராச்சியம் .....

விடிந்திடும் ஒவ்வொரு பொழுதும்
உன் நெற்றியில் முத்தமிட்டு
ஆரம்பித்து நெற்றியில் பொட்டிட்டு
கையில் தேநீருடன் உந்தன்
முத்ததுக்காய் காத்திருந்து
புன்னகையுடன் வாங்கிடுவேன்

நாள் போக்கில் உனக்கு செல்லமாய்
ஒரு பெண் குழந்தையும்
எனக்கு செல்லமாய் உன்னை
போலவே ஒரு அன்பு ஆண்
குழந்தையும் பெற்றெடுத்து
ஒரு கட்டிலில் ஒன்றாய்
உறங்கிடுவோம் ......

சின்ன சின்ன சண்டைகள்
அதிலும் உந்தன் அடிமையாவே
நான் இருப்பேன் தவறு நீ செய்தாலும்
தலை குனிந்தே வாழ்ந்திடுவேன்
உன்னிடம் படைத்த கடவுளே
உன் மீது நான் கொண்ட
பாசத்தால் அதிசயிக்கணும் .....

நம் பிள்ளைகளின் வாழ்கையை
நன்றாக அமைத்து கொடுத்து
விட்டு உனக்கு பணி செய்து கொண்டே
என் ஆயுள் தொடரனும் உந்தன்
ஆயுளின் இறுதி நாளன்று
என் ஆயுளையும் முடித்து கொள்வேன்

உனக்கு முன் நான் இறக்கும் வரத்தை
மட்டும் நான் இறைவனிடம் கேட்கவே
மாட்டேன் உன்னை நீங்கி நான் சென்றால்
என்னை விட யார் உன்னை அன்பாய்
பார்ப்பது .......
v.m.j.gowsi