
நீ தந்த காதல் நினைவுகள்
என்னுள் வாசம் செய்கிறது
வாடிய மலர் மலராது
மீண்டும் என்பதையும்
மறந்து மலர துடிக்குதடா
உன்னை அன்பால் அணைத்தேன்
காதலால் பூசித்தேன் இதயத்தில்
தாயாய் எண்ணி நேசிச்சேன்
இதுவரை நிஜத்தில்
அரவணைக்காததால் தான்
வார்த்தையால் என்னை
வாட்டுகிறாயா ????
பிரிய மனமின்றி பிரிந்தாலும்
பிரியாத உன் நினைவுகளுடன்
தொடரும் வாழ்க்கை பயணம்
முடிந்திடுமே உன் நினைவுகளுடன் .....
v.m.j.gowsi
No comments:
Post a Comment