கடற்கரை மணலிலே கால்கள்
புதைத்து உன் மடியில் நானும்
என் மடியில் நீயும் சாய்ந்து
காற்று வாங்குவோம் வா
ஒரு தேநீர் கோப்பையில்
இருவர் எச்சிலும் கலக்க
ஒன்றாய் தேநீர் பருகுவோம்
அன்பாக வா
புல்வெளியில் அமர்ந்து
ஒருவரை ஒருவர் காதலுடன்
அணைத்தே புகைப்படம்
எடுத்து மகிழ்வோம் வா
நிலவின் துணையோடு
நாம் இருவரும் முற்றவெளியில்
நம் கைவிரல்களை
எண்ணிக்கொண்டே நம்
காதல் கதை பேசிடுவோம் வா
அந்திசாயும் நேரம் வேப்பமர
நிழலிலே நீஎனக்கும் நான்
உனக்கும் தந்திடும் முத்தத்திலே
உடல் சிலிர்ப்போம் வா
கட்டாந்தரையிலே ஒற்றை பாய்
விரித்து ஒற்றை தலையணையில்
நீ தலை வைத்து உறங்க
உன் கையை என் தலையணை
ஆக்கி விடிய விடிய
அணைத்துக்கொண்டே
உறங்கிடுவோம் வா
v.m.j.gowsi
No comments:
Post a Comment