Friday, June 17, 2011

கடற்கரை மணலிலே கால்கள்
புதைத்து உன் மடியில் நானும்
என் மடியில் நீயும் சாய்ந்து
காற்று வாங்குவோம் வா

ஒரு தேநீர் கோப்பையில்
இருவர் எச்சிலும் கலக்க
ஒன்றாய் தேநீர் பருகுவோம்
அன்பாக வா

புல்வெளியில் அமர்ந்து
ஒருவரை ஒருவர் காதலுடன்
அணைத்தே புகைப்படம்
எடுத்து மகிழ்வோம் வா

நிலவின் துணையோடு
நாம் இருவரும் முற்றவெளியில்
நம் கைவிரல்களை
எண்ணிக்கொண்டே நம்
காதல் கதை பேசிடுவோம் வா

அந்திசாயும் நேரம் வேப்பமர
நிழலிலே நீஎனக்கும் நான்
உனக்கும் தந்திடும் முத்தத்திலே
உடல் சிலிர்ப்போம் வா

கட்டாந்தரையிலே ஒற்றை பாய்
விரித்து ஒற்றை தலையணையில்
நீ தலை வைத்து உறங்க
உன் கையை என் தலையணை
ஆக்கி விடிய விடிய
அணைத்துக்கொண்டே
உறங்கிடுவோம் வா
v.m.j.gowsi

No comments:

Post a Comment