Thursday, June 16, 2011


காதலில் வென்றவர் கோடி
காதலில் தோற்றவர் கோடி
காதலில் வென்றும் தினம் தினம்
காதலில் தோற்ப்பவர்
நாம் மட்டுமே .

நீ கேட்டதுமே மறுப்பின்றி
எல்லாம் செய்வேன் ஆனா
உன்னருகில் இருந்து எதுகும்
செய்ய முடியவில்லையே
என்று எண்ணும் போது
காதல் வலி கண்களில்
கண்ணீராய் ..........

உன் அக்கறையும் பாசமும்
நானறிவேண்டா ..என் வேதனை
பார்த்து உன் மனம் குமுறுவதும்
எனக்கு தெரியும்டா ....உன்னருகில்
நானிருந்திருந்தால் வேதனையே
இல்லையே எனக்கு .......

நானும் சராசரி மனித பிறவிதான்
உனக்கான ஆசைகள் என்னுள்
நிறையவே இருக்கு ..நான்
நிறைவேற்ற தான் உன் அருகாமை
எனக்கில்லையடா ..........

தாயிருந்தும் தாயன்பிற்க்காய்
ஏங்கும் குழந்தையடா நான்
என் தாயானவன் நீ இருந்தும்
உன் மடி சாயும் பாக்கியம்
இல்லைதா துர்பாக்கியசாலி
நானடா ...........

காதலையும் கற்றுக்கொடுத்தாய்
காதலிக்கவும் கற்றுக்கொடுத்தாய்
வாழவும் செய்தாய் வாழ்க்கை
இல்லாமலே ஆமா உன்னோடு
வாழாதது வாழ்க்கையா ?
v.m.j.gowsi

No comments:

Post a Comment