Saturday, June 25, 2011


எந்தன் வாழ்வின் சோகங்களை
என்மீது கொண்ட அன்பிற்காய்
சுமந்த எந்தன் உயிரோவியமே !!!
எத்தனை ரணங்கள் எத்தனை
ஏமாற்றங்கள் அத்தனையும்
மறந்து எந்தன் உதட்டில்
புன்னகையை கொடுத்த
என் உத்தமனே !!!
காதலனாய் வந்து எந்தன்
அன்னையாகி மரணத்தை
கொன்று ஜனனத்தை கொடுத்த
என் தாயானவனே !!!
மறு பிறப்பிலும் வேதனையுடன்
நான் பிறந்திடனும் நீ என்னை
நேசிதிடனும் அருகில் இருந்து
என் கணவனாய்............
v.m.j.gowsi

No comments:

Post a Comment