
கற்பனையில் உன்னோடு என் ஆயுளானவனே!!!
கழுத்தில் நீ இட்ட தாலியுடன்
உன்னை சேர்ந்த சந்தோஷத்தில்
கண்கள் உனக்காக ஆனந்த கண்ணீர்
வடிக்கும் நீயோ ஆறுதல் சொல்பவனாய்
இனி உன் கண்ணில் நான் கண்ணீரை
பார்க்ககூடாது என்கிறாய் தலை
அசைத்தவளாய் உன் தோள் சாய்கிறேன் ......
ஆனந்தமாய் ஆரம்பிக்கும் நம்
வாழ்க்கைக்கு அத்திவாரமாய்
நம் முதல் நாள் இரவு உன் மடியில்
இல்லை என் தாயானவன் மடியில்
இனிதே ஆரம்பிக்கிறது நம் காதல்
சாம்ராச்சியம் .....
விடிந்திடும் ஒவ்வொரு பொழுதும்
உன் நெற்றியில் முத்தமிட்டு
ஆரம்பித்து நெற்றியில் பொட்டிட்டு
கையில் தேநீருடன் உந்தன்
முத்ததுக்காய் காத்திருந்து
புன்னகையுடன் வாங்கிடுவேன்
நாள் போக்கில் உனக்கு செல்லமாய்
ஒரு பெண் குழந்தையும்
எனக்கு செல்லமாய் உன்னை
போலவே ஒரு அன்பு ஆண்
குழந்தையும் பெற்றெடுத்து
ஒரு கட்டிலில் ஒன்றாய்
உறங்கிடுவோம் ......
சின்ன சின்ன சண்டைகள்
அதிலும் உந்தன் அடிமையாவே
நான் இருப்பேன் தவறு நீ செய்தாலும்
தலை குனிந்தே வாழ்ந்திடுவேன்
உன்னிடம் படைத்த கடவுளே
உன் மீது நான் கொண்ட
பாசத்தால் அதிசயிக்கணும் .....
நம் பிள்ளைகளின் வாழ்கையை
நன்றாக அமைத்து கொடுத்து
விட்டு உனக்கு பணி செய்து கொண்டே
என் ஆயுள் தொடரனும் உந்தன்
ஆயுளின் இறுதி நாளன்று
என் ஆயுளையும் முடித்து கொள்வேன்
உனக்கு முன் நான் இறக்கும் வரத்தை
மட்டும் நான் இறைவனிடம் கேட்கவே
மாட்டேன் உன்னை நீங்கி நான் சென்றால்
என்னை விட யார் உன்னை அன்பாய்
பார்ப்பது .......
v.m.j.gowsi
No comments:
Post a Comment